படித்தது / பிடித்தது - 78

என் ஜன்னலின் வழியே...

எப்போதும் திறந்திருக்கும்
என் ஜன்னலின் வழியே
வெளிச்சத்தைத் தவிரவும்
வேறு சில வந்து செல்கின்றன

வீட்டுக்கார கிழவியின் சப்தம்
கிழவியின் வெள்ளைப் பூனை
பூனையின் குட்டிகள்
புதிதாக புற்றமைத்திருக்கும்
எறும்புக் கூட்டம்
கரையான்
பூரான் தவிர
அவ்வப்போது
காற்று கூட வந்து செல்கிறது.

ஆனால்,
ஒரு போதும் வரவேயில்லை
என் தனிமையை உடைக்கும்
ஒரு பலசாலி!

- கிருஷ்ணமூர்த்தி

நன்றி: பெயரற்ற யாத்ரீகன்.

Comments

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

உங்க வீட்டுப் பொண்ணு

இறுதி இரவு [சிறுகதை]