தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட...
சென்ற பொங்கல் தினத்தன்று விஜய் டிவியில் சிவகார்த்திகேயனை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அதில் சில சங்கடத்துக்குரிய விஷயங்கள் இடம் பெற்றன (குறைந்தபட்சம் என்னளவில்). கல்லூரிப் பெண்கள் சிலர் அவரது ரசிகைகள் எனக் காட்டப்பட்டு மேடையிலேயே குறும்புத்தனம் என்ற பெயரில் சில ஆபாசங்களில் ஈடுபட்டார்கள் (மறுபடி என்னளவில் தான்). அதன் காணொளிகளை இங்கே பார்க்கலாம் (விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் ஏற்றப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் காணொளி யில் இந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன): http://www.dailymotion.com/video/x19n58l_engaveettu-4_shortfilms (07:00 to end) http://www.dailymotion.com/video/x19n5qh_engaveettu-5_fun (start to 04:00) ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு பொங்கல் ஊட்டி விட்டு தனக்கும் அவரை ஊட்டி விடச் செய்கிறார். ஒருவர் சிவகார்த்திகேயனின் கன்னத்தைக் கிள்ளி விட்டு தன் கன்னத்தையும் அவரைக் கிள்ள வைக்கிறார். ஒருவர் லிஃப்ட்டுக்குள் தீபிகா படுகோனுடன் மாட்டுக் கொண்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கிறார். ஒருவர் அவர் தன்னைக் கையில் தூக்கிக...
“ இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ ” - திருக்குறள் (913) “கன்னிப் பொணம் விழுந்திருச்சு!” ஊர் முழுக்க இதே பேச்சாய் இருந்தது. டீக்கடையில், பொதுக் கழிப்பிடத்தில், வீட்டுத் திண்ணையில், முச்சந்திக் கிணற்றடியில், சீட்டுக் கச்சேரியில், எல்லா இடங்களிலும். “குப்பனுக்கு சொல்லி விட்டாச்சா?” விஷயம் கேள்விப்பட்டவர்களின் முதல் கேள்வி இதுவாகவே இருந்தது. இறந்தது யார்? எப்படிச் சாவு நடந்தது? என்றெல்லாம் பிற்பாடு தான் பேச்சு தொடங்கியது. “சடங்கு எப்ப நடக்குதாம்?” “இதென்னய்யா புதுசாக் கேட்கறீங்க? எப்பவும் போல இன்னிக்கு ராத்திரி தான்.” கண்களில் மின்னும் ஆர்வத்தை மறைத்தபடி மெல்லிய குரலில் கிசுகிசுத்தார்கள். அந்தப் பெரிய வீட்டில் பிணம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி தரையில் ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்திருக்க, ராமசாமி மட்டும் பிணத்தின் முகத்தைப் பார்க்க வாகாக மரச்சேர் போட்டு அமர்ந்து கொண்டு தோளில் இருந்த துண்டின் முனையைச் சுருட்டி வாய்க்கும் மூக்கிற்கும் மத்தியில் வைத்திருந்தார். ஏற்கனவே அழுதிருப்பதும் இனியும் அழத் தயார் என்பதையும் அது சொல்லியது. அவர் வயதொத்தோர் வந்து பிணத்தை வ...
Comments
i ll say ve dreams.. ve hopes.. but make it successful...